ஆணோ பெண்ணோ... வாழ்வின் முக்கிய காலகட்டத்தில் எடுக்கும் உறுதியான முடிவுகள் அவர்களின் வாழ்வை மலர்ப் படுக்கையாகவோ முள்படுக்கையாகவோ மாற்றும் வல்லமை கொண்டவை. தவறான முடிவுகள் கற்றுத் தரும் கரடுமுரடுப் பயணம் மட்டும் தான் கதையாக முடியுமா? சரியான நேரத்தில் எடுக்கப்படும் தெளிவான முடிவுகளும் அந்த முடிவை எடுக்கத் தூண்டிய நிகழ்வுகளும்... அந்த முடிவை நிலைநிறுத்த முனைவதால் ஏற்படும் வலிகளும்... அந்த வலிகளுக்கான நற்கூலியாய் கிடைக்கப்பெறும் வசந்தம் போன்ற வாழ்கையும் கூடக் கதையாக முடியும் தானே! கலைந்து போகக் கூடிய மேகங்களை சரியான நேரத்தில் இனம் கண்டு, அதிலிருந்து விலகி சரியான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டால் வாழ்க்கை எவ்வாறு தித்திக்கும் என்பதை உணர்