ஏ. கே. செட்டியார் ஒரு பிரயாணி. பிரயாணத்தை அனுபவிக்கிறவர். தமது அனுபவத்தைப் பிறர்க்கு உற்சாகம் உண்டாக்குமாறு சொல்வதிலே கைதேர்ந்தவர். ஏற்கனவே ‘ஜப்பான்’, ‘உலகம் சுற்றும் தமிழன்’, ‘அமெரிக்கா’ ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய நூல்களைப் படிக்கிறபோது, நாமும் இவரோடு கூடவே பிரயாணம் செய்யவேண்டுமென்ற ஆசை ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் உண்டாகும். அந்த ஆசை வளருமானால் தமிழ்நாடு நிச்சயம் வளரும்.