About the கைதேர்ந்த ரசனைக்காரர் ஒருவரின் பார்வையில் இலக்கியமும் வாழ்வின் மகத்தான தருணங்களும் நெகிழ்ச்சியான நினைவுகளும் என்னவிதமாக புதுப்பரிமாணம் பெறுகின்றன என்பதை இந்நூலில் நாம் காணலாம். சுகா என்னும் ரசனைக்காரரின் பதிவுகளில், வழிநெடுக நம்முடன் நடந்துவரும் உள்ளார்ந்த மெல்லிய நகைச்சுவைத் தெறிப்புகளும், அதன் இன்னொரு புள்ளியான ஓர் எளிய மனிதனின் உள்ளம் பதறும் காட்சிகளும், எந்த ஒரு சக மனிதனையும் சட்டெனப் பிடித்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. கண்ணையும் காதையும் அல்ல, ஓர் எழுத்தாளன் முழுமையாகத் திறந்து வைத்திருக்கவேண்டியது மனதைத்தான் என்பதை இக்கட்டுரைகள் உரக்கச் சொல்கின்றன. - தடம் பதிப்பகம் About the சுகா பிறந்தது திருநெல்வேலியில்.